ம் படங்கள், மௌனப் படங்கள் - இரண்டும் ஒன்றையொன்று முறைத்துக் கொண்டு போட்டியிடும் எதிரிகள் என்று ஏன் நினைக்க வேண்டும் ? இந்த இரண்டுமே ஒன்றாக வளர முடியாதா என்ன ? இந்தக் கணினிக் காலத்திலும், சிலர் அற்புதமான பென்சில் தீற்றல் ஓவியங்களை வரைந்து கொண்டிருப்பது போல், பேசும் படங்கள் வந்து விட்ட பிறகும், தனக்குப் பரிச்சயமான மௌனப் படங்களைத் தொடர சார்லி சாப்ளின் விரும்பினார். தவிர, திரைப்படங்களில் ஒலியைச் சேர்க்கும் தொழில் நுட்பம், அப்போது தான் உருவாகி, இன்னும் ஆரம்ப நிலையில் தான் இருந்தது. ஆகவே, அந்தக் காலப் பேசும் படங்கள், பெரும்பாலும் 'இரைச்சல்'களின் தொகுப்பாகவே இருந்தன. ஆகவே, இந்தப் படங்களைப் பார்த்து ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்கிய சார்லி சாப்ளின், இந்த 'அரைகுறை' தொழில் நுட்பம் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியடையட்டும், அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தார். தவிர, மக்களைச் சிரிக்க வைப்பதற்கு வசனங்கள் தேவையில்லை என்று சாப்ளின் நம்பினார். 'மௌனப் படங்களில், ரசிகன் தன்னைப் படத்தோடு பொருத்திக் கொண்டு ரசிக்க முடியும். பேசும் படங்களில் அது சாத்தியமில்லை. எல்லாவற்றையும் உடைத்துச் சொல்லி விடுவதால், திரை ஊடகத்தின் அழகே நாசமாகி விடுகிறது', என்று கருத்து தெரிவித்தார் அவர்.
'என்னுடைய படங்கள் பேசவேண்டாம்', என்ற சார்லி சாப்ளினின் முடிவிற்கு, இன்னொரு காரணமும் உண்டு. அவருடைய படங்கள் அனைத்தும், உள்நாட்டை விட, வெளிநாட்டில் தான் பிரமாதமாய் ஓடி வசூல் சேர்த்தன. இந்த நிலைமையில், தன் படங்கள் (ஆங்கிலத்தில்) பேசத் தொடங்கி விட்டால், அந்த மொழி அறியாத வெளிநாட்டு ரசிகர்கள் அவற்றை நிராகரித்து விடுவார்களே என்பது சாப்ளினின் நியாயமான கவலை ! இப்படிப் பல்வேறு காரணங்களால், தன்னுடைய படங்களில் வசனங்களைச் சேர்ப்பதில்லை என்று சார்லி சாப்ளின் முடிவு செய்தார். ஆனால், இதைச் செயல் படுத்துகையில், அவர் பலவிதமான எதிர்ப்புகள், கேலி, கிண்டல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
இவ்வளவு ஏன் ? அவருடைய 'யுனைடட் ஆர்ட்டிஸ்ட்' நிறுவனத்தில் உள்ளவர்கள் சிலரே, சாப்ளினின் இந்த முடிவை எதிர்த்தார்கள். இது பற்றி ஒரு சுவாரஸ்யமான குறிப்பு உள்ளது. சார்லி சாப்ளினோடு பணியாற்றும் ஒரு தொழில் நுட்பக் கலைஞர், அவரிடம் சொல்கிறார், 'சாப்ளின், காலம் மாறி விட்டது, இனிமேல் நீங்கள் மௌனப் படங்கள் எடுக்கக்கூடாது. உடனடியாக டாக்கி-க்கு மாறி விடுங்கள் !' 'அதெல்லாம் முடியாது', பிடிவாதமாய்ச் சொல்கிறார் சார்லி சாப்ளின், 'வேண்டுமானால், நீங்கள் தனியாக ஒரு டாக்கி எடுத்துக் கொள்ளுங்கள், தயவு செய்து என்னை இந்த விஷயத்தில் இழுக்காதீர்கள்' 'பிடிவாதம் செய்யாதீர்கள் சாப்ளின்', அந்த இன்னொருவர் தொடர்ந்து சாப்ளினை வற்புறுத்துகிறார், 'நீங்கள் மட்டும் ஒரு டாக்கி எடுத்தால், நம் கம்பெனி பக்கெட், பக்கெட்டாய்ப் பணம் பண்ணலாம்' இப்போது, சாப்ளினிடம் ஒரு சிறு மௌனம். பிறகு, கம்பீரமான குரலில் அவருடைய முடிவான கருத்து வருகிறது, 'நான் ஒரு இயக்குனர், எனக்கு நல்ல படம் பண்ணுவதில் தான் ஆசை, பக்கெட் பக்கெட்டாய்ப் பணம் பண்ணுவதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் !' இப்படியாக, தன்னுடைய படங்களில் வசனத்தைச் சேர்ப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்த சார்லி சாப்ளின், 'பேசும் படம்' என்ற புதிய தொழில் நுட்பத்தின் இன்னொரு அம்சமாகிய 'இசை'யை மட்டும் தன் படங்களில் சேர்த்துக் கொள்ள இணங்கினார். இந்தச் சலுகைக்கு முக்கியமான காரணம், தனது மௌனப் படங்களோடு, பொருத்தமான இசையைச் சேர்க்கிற போது, அவை வேறொரு தளத்துக்கு உயரும் என்று சார்லி சாப்ளின் நம்பியது தான்.
தவிர, சிறுவயதிலிருந்தே இசை நிகழ்ச்சிகள், மேடைகள் என்று வலுவான இசைப் பின்னணியில் வளர்ந்த சார்லி சாப்ளின், தன் படங்களுக்குத் தானே இசையமைக்க விரும்பினார். இதன்படி, சார்லி சாப்ளினின் அடுத்த திரைப்படமாகிய 'City Lights', வசனங்கள் இல்லாத, ஆனால் இசையோடு கூடிய திரைப்படமாய் வெளிவரும் என்று அறிவிப்புகள் வந்தன. இதைக் கேள்விப்பட்ட பலரும், சார்லி சாப்ளினை கேலி செய்து மகிழ்ந்தார்கள். 'மற்றவர்கள் எல்லோரும் மௌனப் படத்தைத் தலை முழுகி விட்ட பின், இவர் மட்டும் ஏன் இப்படிப் பழைய பஞ்சாங்கமாய் இருக்கிறார் ?', என்று கிண்டல் செய்யும் விவாதங்கள் தொடங்கின. ஆனால், இந்தச் சலசலப்புகளுக்கெல்லாம் சார்லி சாப்ளின் கொஞ்சமும் அசரவில்லை. அவர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். 'மக்கள் என்னைப் பார்ப்பதற்குத் தான் திரையரங்கிற்கு வருகிறார்கள்', என்று நிச்சயமாய் எண்ணிய அவர், தன்னுடைய படம் பேசாவிட்டாலும், 'பேசப்படும்' என்று நம்பினார்.
சாப்ளினின் 'City Lights' ஒரு உணர்ச்சிமயமான கதை. கண் பார்வை இல்லாத ஒரு பெண்ணைச் சந்திக்கும் நாடோடி சாப்ளின், அவளுக்குப் பலவிதமான உதவிகளைச் செய்கிறார். அவளுக்குப் பார்வை கிடைப்பதற்கும் காரணமாய் இருக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணுக்குப் பார்வை திரும்பியதும், அவள் சாப்ளினைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அது வர
ம் படங்கள், மௌனப் படங்கள் - இரண்டும் ஒன்றையொன்று முறைத்துக் கொண்டு போட்டியிடும் எதிரிகள் என்று ஏன் நினைக்க வேண்டும் ? இந்த இரண்டுமே ஒன்றாக வளர முடியாதா என்ன ? இந்தக் கணினிக் காலத்திலும், சிலர் அற்புதமான பென்சில் தீற்றல் ஓவியங்களை வரைந்து கொண்டிருப்பது போல், பேசும் படங்கள் வந்து விட்ட பிறகும், தனக்குப் பரிச்சயமான மௌனப் படங்களைத் தொடர சார்லி சாப்ளின் விரும்பினார். தவிர, திரைப்படங்களில் ஒலியைச் சேர்க்கும் தொழில் நுட்பம், அப்போது தான் உருவாகி, இன்னும் ஆரம்ப நிலையில் தான் இருந்தது. ஆகவே, அந்தக் காலப் பேசும் படங்கள், பெரும்பாலும் 'இரைச்சல்'களின் தொகுப்பாகவே இருந்தன. ஆகவே, இந்தப் படங்களைப் பார்த்து ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்கிய சார்லி சாப்ளின், இந்த 'அரைகுறை' தொழில் நுட்பம் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியடையட்டும், அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தார். தவிர, மக்களைச் சிரிக்க வைப்பதற்கு வசனங்கள் தேவையில்லை என்று சாப்ளின் நம்பினார். 'மௌனப் படங்களில், ரசிகன் தன்னைப் படத்தோடு பொருத்திக் கொண்டு ரசிக்க முடியும். பேசும் படங்களில் அது சாத்தியமில்லை. எல்லாவற்றையும் உடைத்துச் சொல்லி விடுவதால், திரை ஊடகத்தின் அழகே நாசமாகி விடுகிறது', என்று கருத்து தெரிவித்தார் அவர்.
'என்னுடைய படங்கள் பேசவேண்டாம்', என்ற சார்லி சாப்ளினின் முடிவிற்கு, இன்னொரு காரணமும் உண்டு. அவருடைய படங்கள் அனைத்தும், உள்நாட்டை விட, வெளிநாட்டில் தான் பிரமாதமாய் ஓடி வசூல் சேர்த்தன. இந்த நிலைமையில், தன் படங்கள் (ஆங்கிலத்தில்) பேசத் தொடங்கி விட்டால், அந்த மொழி அறியாத வெளிநாட்டு ரசிகர்கள் அவற்றை நிராகரித்து விடுவார்களே என்பது சாப்ளினின் நியாயமான கவலை ! இப்படிப் பல்வேறு காரணங்களால், தன்னுடைய படங்களில் வசனங்களைச் சேர்ப்பதில்லை என்று சார்லி சாப்ளின் முடிவு செய்தார். ஆனால், இதைச் செயல் படுத்துகையில், அவர் பலவிதமான எதிர்ப்புகள், கேலி, கிண்டல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
இவ்வளவு ஏன் ? அவருடைய 'யுனைடட் ஆர்ட்டிஸ்ட்' நிறுவனத்தில் உள்ளவர்கள் சிலரே, சாப்ளினின் இந்த முடிவை எதிர்த்தார்கள். இது பற்றி ஒரு சுவாரஸ்யமான குறிப்பு உள்ளது. சார்லி சாப்ளினோடு பணியாற்றும் ஒரு தொழில் நுட்பக் கலைஞர், அவரிடம் சொல்கிறார், 'சாப்ளின், காலம் மாறி விட்டது, இனிமேல் நீங்கள் மௌனப் படங்கள் எடுக்கக்கூடாது. உடனடியாக டாக்கி-க்கு மாறி விடுங்கள் !' 'அதெல்லாம் முடியாது', பிடிவாதமாய்ச் சொல்கிறார் சார்லி சாப்ளின், 'வேண்டுமானால், நீங்கள் தனியாக ஒரு டாக்கி எடுத்துக் கொள்ளுங்கள், தயவு செய்து என்னை இந்த விஷயத்தில் இழுக்காதீர்கள்' 'பிடிவாதம் செய்யாதீர்கள் சாப்ளின்', அந்த இன்னொருவர் தொடர்ந்து சாப்ளினை வற்புறுத்துகிறார், 'நீங்கள் மட்டும் ஒரு டாக்கி எடுத்தால், நம் கம்பெனி பக்கெட், பக்கெட்டாய்ப் பணம் பண்ணலாம்' இப்போது, சாப்ளினிடம் ஒரு சிறு மௌனம். பிறகு, கம்பீரமான குரலில் அவருடைய முடிவான கருத்து வருகிறது, 'நான் ஒரு இயக்குனர், எனக்கு நல்ல படம் பண்ணுவதில் தான் ஆசை, பக்கெட் பக்கெட்டாய்ப் பணம் பண்ணுவதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் !' இப்படியாக, தன்னுடைய படங்களில் வசனத்தைச் சேர்ப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்த சார்லி சாப்ளின், 'பேசும் படம்' என்ற புதிய தொழில் நுட்பத்தின் இன்னொரு அம்சமாகிய 'இசை'யை மட்டும் தன் படங்களில் சேர்த்துக் கொள்ள இணங்கினார். இந்தச் சலுகைக்கு முக்கியமான காரணம், தனது மௌனப் படங்களோடு, பொருத்தமான இசையைச் சேர்க்கிற போது, அவை வேறொரு தளத்துக்கு உயரும் என்று சார்லி சாப்ளின் நம்பியது தான்.
தவிர, சிறுவயதிலிருந்தே இசை நிகழ்ச்சிகள், மேடைகள் என்று வலுவான இசைப் பின்னணியில் வளர்ந்த சார்லி சாப்ளின், தன் படங்களுக்குத் தானே இசையமைக்க விரும்பினார். இதன்படி, சார்லி சாப்ளினின் அடுத்த திரைப்படமாகிய 'City Lights', வசனங்கள் இல்லாத, ஆனால் இசையோடு கூடிய திரைப்படமாய் வெளிவரும் என்று அறிவிப்புகள் வந்தன. இதைக் கேள்விப்பட்ட பலரும், சார்லி சாப்ளினை கேலி செய்து மகிழ்ந்தார்கள். 'மற்றவர்கள் எல்லோரும் மௌனப் படத்தைத் தலை முழுகி விட்ட பின், இவர் மட்டும் ஏன் இப்படிப் பழைய பஞ்சாங்கமாய் இருக்கிறார் ?', என்று கிண்டல் செய்யும் விவாதங்கள் தொடங்கின. ஆனால், இந்தச் சலசலப்புகளுக்கெல்லாம் சார்லி சாப்ளின் கொஞ்சமும் அசரவில்லை. அவர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். 'மக்கள் என்னைப் பார்ப்பதற்குத் தான் திரையரங்கிற்கு வருகிறார்கள்', என்று நிச்சயமாய் எண்ணிய அவர், தன்னுடைய படம் பேசாவிட்டாலும், 'பேசப்படும்' என்று நம்பினார்.
சாப்ளினின் 'City Lights' ஒரு உணர்ச்சிமயமான கதை. கண் பார்வை இல்லாத ஒரு பெண்ணைச் சந்திக்கும் நாடோடி சாப்ளின், அவளுக்குப் பலவிதமான உதவிகளைச் செய்கிறார். அவளுக்குப் பார்வை கிடைப்பதற்கும் காரணமாய் இருக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணுக்குப் பார்வை திரும்பியதும், அவள் சாப்ளினைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அது வர