TG Telegram Group & Channel
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil | United States America (US)
Create: Update:

கொண்டு, இஷ்டப்பட்ட நேரத்தில் ஸ்டூடியோவுக்குச் சென்று, வெகுநேரம் வரை பணியாற்றி, படங்களைத் திட்டமிட்டு, படமாக்கி, வெளியிடும் சவுகர்யம், திருமணத்துக்குப் பின் கிடைக்குமா ? மனைவி, வீடு, சேமிப்பு, குழந்தைகள், மருத்துவமனை, பள்ளிக்கூடம் என்று ஒரு பெரிய சுழலில், வலியச் சென்று மாட்டிக் கொள்ளவேண்டுமா ? தவிர, குடும்ப வாழ்க்கையில் நிகழச் சாத்தியமுள்ள குழப்பங்களும், பிரச்சனைகளும், தன்னுடைய படங்களின் தரத்தை பாதித்துவிடுமோ என்றும் சாப்ளினுக்கு பயமாய் இருந்தது. இப்படிப் பலவிதமான காரணங்களால் தான், சார்லி சாப்ளின் தன்னுடைய திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார். அதைப்பற்றி தீவீரமாய் நினைக்கக் கூட நேரமில்லாதபடி, அவருடைய திரைப்படங்களும், அதுசார்ந்த பணிகளும் அவரை எந்நேரமும் பரபரப்பாய் வைத்திருந்தன.



1918ம் ஆண்டு, ஒரு விருந்தில் மில்ட்ரெட் ஹாரிஸ் (Mildred Harris) என்ற அழகான இளம் நடிகையைச் சந்தித்தார் சார்லி சாப்ளின். அப்போது சாப்ளினுக்கு வயது இருபத்தொன்பது. மில்ட்ரெடுக்கு, பதினாறு ! கண்ணே இல்லாத காதலுக்கு, வயதா முக்கியம் ? சாப்ளினுக்கும், மில்ட்ரெடுக்கும் இடையே சட்டென்று உதயமான காதல், அதே வேகத்தில் வளர்ந்து, திருமணத்தில் முடிந்தது. சார்லி சாப்ளின் - மில்ட்ரெட் ஹாரிஸ் இருவரின் 'திடீர்' திருமணம், 1918ம் ஆண்டு அக்டோபர் 23ம் நாள் நடைபெற்றது.



ஏட்னாவைத் திருமணம் செய்து கொள்ள எண்ணிய போது, ரொம்பவும் தயங்கி, கடைசி வரை ஒரு உறுதியான முடிவை எடுக்காத சார்லி சாப்ளின், மில்ட்ரெட் ஹாரிஸ் விஷயத்தில் மட்டும் இப்படி திடுதிப்பென்று தீர்மானித்து, சட்டென்று திருமண ஏற்பாடுகளைச் செய்து முடித்தது எல்லோருக்குமே பெரிய ஆச்சரியம் தான். ஆனால், இப்படி அவசரமாய் முடிவெடுத்த சார்லி சாப்ளின், அடுத்த சில மாதங்களுக்குள், அதற்காக ரொம்பவும் வருந்த வேண்டியிருந்தது. நடந்து முடிந்த திருமணத்தின் பரபரப்புகள் ஓய்வதற்குள், சாப்ளினுக்கும், அவருடைய மனைவி மில்ட்ரெடுக்கும் இடையே பிரச்சனைகள் தொடங்கி விட்டன. அது வரை நிம்மதியாய் ஒற்றை அறையில் வாழ்ந்து கொண்டிருந்த சார்லி சாப்ளின், இப்போது தன் மனைவியோடு ஒரு தனி வீட்டுக்குக் குடி பெயர்ந்தார். ஆனால், எந்நேரமும் தன்னுடைய திரைப் படங்களைப் பற்றிய சிந்தனைகள், திட்டங்கள், பணிகளோடு வாழ்ந்து பழகிவிட்ட சாப்ளின், திருமண வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளுக்குள், கட்டாயங்களுக்குள் பொருந்த முடியாமல் திணறினார். இதனால், அவருக்கும் அவர் மனைவிக்கும் நடுவே ஏகப்பட்ட சண்டை. போதாக்குறைக்கு, இன்னொரு பெரிய பிரச்சனை - இன்னும் பதின்ம வயதைத் தாண்டியிராத மில்ட்ரெட் ஹாரிஸ், கருவுற்றார். இத்தனை இளம் வயதில் குழந்தை பெறுவது கொஞ்சம் ஆபத்தான விஷயம் என்பதால், அந்தக் கவலையும் சாப்ளினை வாட்டியது. இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்த சாப்ளின், மன அமைதி கெட்டு, தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் திணறினார். இந்தக் கால கட்டத்தில் அவர் இயக்கிய, நடித்த படங்கள் எல்லாமே, 'சுமார்' ரகம் தான். இந்த விஷயம் சார்லி சாப்ளினுக்கும் நன்றாகவே புரிந்திருந்தது. ஆனால், இந்தப் பிரச்சனையிலிருந்து விலகி, வெளி வரும் நுட்பம் தான் அவருக்குத் தெரியவில்லை. அடுத்து, என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார் அவர். ரொம்ப சிரமமான காலகட்டம் அது. சாப்ளினுக்கு இரண்டு பக்கமும் இடி. 'எப்போதும் ஸ்டூடியோ தானா ? நாள் முழுதும் வேலை தானா ? வீட்டிலிருக்கும் பெண்டாட்டியை கவனிக்கவே மாட்டீர்களா ?', என்றெல்லாம் வீட்டில் அவளுடைய மனைவி கத்துகிறாள். அவளைப் பார்க்க வேண்டாம் என்று படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தால், வேலையே ஓடுவதில்லை. பிடிவாதமாய் முயன்றாலும், உருப்படியில்லாத காட்சிகளாகத் தான் வந்து குவிகிறது.




என்ன ஆயிற்று எனக்கு ? என்னுடைய பழைய வேகம் எங்கே ? பழைய சுறுசுறுப்பு எங்கே ? பழைய திறமை எங்கே ? இப்படி சாப்ளின் பலவிதமாய்க் குழம்பிக் கொண்டிருந்த போது, 1919ம் ஆண்டு ஜுலை ஏழாம் தேதி, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டதும், சார்லி சாப்ளின் தனது கவலைகள் எல்லாவற்றையும் மறந்து, உலகளவு சந்தோஷத்தில் திளைத்தார். தன் மகனுக்கு 'நார்மன் ஸ்பென்ஸர் சாப்ளின்' என்று பெயர் வைத்தார் சார்லி சாப்ளின். குழந்தையின் அம்மா மில்டெர்ட் சாப்ளின், அவனை 'என் செல்ல எலிக்குஞ்சு', என்று கொஞ்சினாள். ஆனால் சாப்ளின் - மில்ட்ரெட் தம்பதியின் அந்தச் செல்ல எலிக்குஞ்சு, மொத்தம் மூன்றே நாள்கள் தான் உயிர் வாழ்ந்தது. மகன் வந்த வேளை, இனிமேல் தங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்று உறுதியாய் நம்பிக் கொண்டிருந்த சாப்ளினை, இந்த மரணச் செய்தி தாக்கி உலுக்கியது. கொடுப்பது போல் கொடுத்து, அந்த சந்தோஷத்தை அனுபவிப்பதற்குள், யாரோ அதைப் பறித்துக் கொண்டு ஓடி விட்டதுபோன்ற ஏமாற்றத்துடன், ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினார் சார்லி சாப்ளின். இந்த மரணத்துக்குத் தானும் ஒரு விதத்தில் காரணமாகி விட்டோமே என்று நினைக்கும் போத

கொண்டு, இஷ்டப்பட்ட நேரத்தில் ஸ்டூடியோவுக்குச் சென்று, வெகுநேரம் வரை பணியாற்றி, படங்களைத் திட்டமிட்டு, படமாக்கி, வெளியிடும் சவுகர்யம், திருமணத்துக்குப் பின் கிடைக்குமா ? மனைவி, வீடு, சேமிப்பு, குழந்தைகள், மருத்துவமனை, பள்ளிக்கூடம் என்று ஒரு பெரிய சுழலில், வலியச் சென்று மாட்டிக் கொள்ளவேண்டுமா ? தவிர, குடும்ப வாழ்க்கையில் நிகழச் சாத்தியமுள்ள குழப்பங்களும், பிரச்சனைகளும், தன்னுடைய படங்களின் தரத்தை பாதித்துவிடுமோ என்றும் சாப்ளினுக்கு பயமாய் இருந்தது. இப்படிப் பலவிதமான காரணங்களால் தான், சார்லி சாப்ளின் தன்னுடைய திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார். அதைப்பற்றி தீவீரமாய் நினைக்கக் கூட நேரமில்லாதபடி, அவருடைய திரைப்படங்களும், அதுசார்ந்த பணிகளும் அவரை எந்நேரமும் பரபரப்பாய் வைத்திருந்தன.



1918ம் ஆண்டு, ஒரு விருந்தில் மில்ட்ரெட் ஹாரிஸ் (Mildred Harris) என்ற அழகான இளம் நடிகையைச் சந்தித்தார் சார்லி சாப்ளின். அப்போது சாப்ளினுக்கு வயது இருபத்தொன்பது. மில்ட்ரெடுக்கு, பதினாறு ! கண்ணே இல்லாத காதலுக்கு, வயதா முக்கியம் ? சாப்ளினுக்கும், மில்ட்ரெடுக்கும் இடையே சட்டென்று உதயமான காதல், அதே வேகத்தில் வளர்ந்து, திருமணத்தில் முடிந்தது. சார்லி சாப்ளின் - மில்ட்ரெட் ஹாரிஸ் இருவரின் 'திடீர்' திருமணம், 1918ம் ஆண்டு அக்டோபர் 23ம் நாள் நடைபெற்றது.



ஏட்னாவைத் திருமணம் செய்து கொள்ள எண்ணிய போது, ரொம்பவும் தயங்கி, கடைசி வரை ஒரு உறுதியான முடிவை எடுக்காத சார்லி சாப்ளின், மில்ட்ரெட் ஹாரிஸ் விஷயத்தில் மட்டும் இப்படி திடுதிப்பென்று தீர்மானித்து, சட்டென்று திருமண ஏற்பாடுகளைச் செய்து முடித்தது எல்லோருக்குமே பெரிய ஆச்சரியம் தான். ஆனால், இப்படி அவசரமாய் முடிவெடுத்த சார்லி சாப்ளின், அடுத்த சில மாதங்களுக்குள், அதற்காக ரொம்பவும் வருந்த வேண்டியிருந்தது. நடந்து முடிந்த திருமணத்தின் பரபரப்புகள் ஓய்வதற்குள், சாப்ளினுக்கும், அவருடைய மனைவி மில்ட்ரெடுக்கும் இடையே பிரச்சனைகள் தொடங்கி விட்டன. அது வரை நிம்மதியாய் ஒற்றை அறையில் வாழ்ந்து கொண்டிருந்த சார்லி சாப்ளின், இப்போது தன் மனைவியோடு ஒரு தனி வீட்டுக்குக் குடி பெயர்ந்தார். ஆனால், எந்நேரமும் தன்னுடைய திரைப் படங்களைப் பற்றிய சிந்தனைகள், திட்டங்கள், பணிகளோடு வாழ்ந்து பழகிவிட்ட சாப்ளின், திருமண வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளுக்குள், கட்டாயங்களுக்குள் பொருந்த முடியாமல் திணறினார். இதனால், அவருக்கும் அவர் மனைவிக்கும் நடுவே ஏகப்பட்ட சண்டை. போதாக்குறைக்கு, இன்னொரு பெரிய பிரச்சனை - இன்னும் பதின்ம வயதைத் தாண்டியிராத மில்ட்ரெட் ஹாரிஸ், கருவுற்றார். இத்தனை இளம் வயதில் குழந்தை பெறுவது கொஞ்சம் ஆபத்தான விஷயம் என்பதால், அந்தக் கவலையும் சாப்ளினை வாட்டியது. இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்த சாப்ளின், மன அமைதி கெட்டு, தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் திணறினார். இந்தக் கால கட்டத்தில் அவர் இயக்கிய, நடித்த படங்கள் எல்லாமே, 'சுமார்' ரகம் தான். இந்த விஷயம் சார்லி சாப்ளினுக்கும் நன்றாகவே புரிந்திருந்தது. ஆனால், இந்தப் பிரச்சனையிலிருந்து விலகி, வெளி வரும் நுட்பம் தான் அவருக்குத் தெரியவில்லை. அடுத்து, என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார் அவர். ரொம்ப சிரமமான காலகட்டம் அது. சாப்ளினுக்கு இரண்டு பக்கமும் இடி. 'எப்போதும் ஸ்டூடியோ தானா ? நாள் முழுதும் வேலை தானா ? வீட்டிலிருக்கும் பெண்டாட்டியை கவனிக்கவே மாட்டீர்களா ?', என்றெல்லாம் வீட்டில் அவளுடைய மனைவி கத்துகிறாள். அவளைப் பார்க்க வேண்டாம் என்று படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தால், வேலையே ஓடுவதில்லை. பிடிவாதமாய் முயன்றாலும், உருப்படியில்லாத காட்சிகளாகத் தான் வந்து குவிகிறது.




என்ன ஆயிற்று எனக்கு ? என்னுடைய பழைய வேகம் எங்கே ? பழைய சுறுசுறுப்பு எங்கே ? பழைய திறமை எங்கே ? இப்படி சாப்ளின் பலவிதமாய்க் குழம்பிக் கொண்டிருந்த போது, 1919ம் ஆண்டு ஜுலை ஏழாம் தேதி, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டதும், சார்லி சாப்ளின் தனது கவலைகள் எல்லாவற்றையும் மறந்து, உலகளவு சந்தோஷத்தில் திளைத்தார். தன் மகனுக்கு 'நார்மன் ஸ்பென்ஸர் சாப்ளின்' என்று பெயர் வைத்தார் சார்லி சாப்ளின். குழந்தையின் அம்மா மில்டெர்ட் சாப்ளின், அவனை 'என் செல்ல எலிக்குஞ்சு', என்று கொஞ்சினாள். ஆனால் சாப்ளின் - மில்ட்ரெட் தம்பதியின் அந்தச் செல்ல எலிக்குஞ்சு, மொத்தம் மூன்றே நாள்கள் தான் உயிர் வாழ்ந்தது. மகன் வந்த வேளை, இனிமேல் தங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்று உறுதியாய் நம்பிக் கொண்டிருந்த சாப்ளினை, இந்த மரணச் செய்தி தாக்கி உலுக்கியது. கொடுப்பது போல் கொடுத்து, அந்த சந்தோஷத்தை அனுபவிப்பதற்குள், யாரோ அதைப் பறித்துக் கொண்டு ஓடி விட்டதுபோன்ற ஏமாற்றத்துடன், ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினார் சார்லி சாப்ளின். இந்த மரணத்துக்குத் தானும் ஒரு விதத்தில் காரணமாகி விட்டோமே என்று நினைக்கும் போத


>>Click here to continue<<

Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil




Share with your best friend
VIEW MORE

United States America Popular Telegram Group (US)