ுவர் மிஞ்சும் விதத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம். பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் புகழ்பெற்ற சார்லி சாப்ளின், அமெரிக்கத் திரை வரலாற்றில் வேறு எந்தக் கலைஞரும் சம்பாதிக்காத அளவுக்கு பணத்தையும், புகழையும் சேர்த்தார். ஆனால், இந்தச் செல்வங்கள் அனைத்தும் தராத ஒரு நிம்மதியையும், முழுமையுணர்வையும், ஏட்னாவின் நட்பு அவருக்குக் கொடுத்தது. 'இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனிதன் நான் தான். என்னை இப்படிச் செய்தவள் நீதான்', என்று ஏட்னாவைப் பற்றி ஒருமுறை எழுதியிருக்கிறார் சார்லி சாப்ளின்.
இதுபோன்ற குறிப்புகளை வைத்துக் கொண்டு, சாப்ளினும், ஏட்னாவும் காதலிக்கிறார்கள் என்று பலரும் நம்பினார்கள். அவர்கள் ஊகித்தது உண்மையோ, பொய்யோ, கடைசி வரை அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், நல்ல நண்பர்களாகத் தொடர்ந்தார்கள்.
பின்னர், சாப்ளின் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட போது, ஏட்னாவால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், அதனால் மனமுடைந்து, அவர் குடிப் பழக்கத்தில் விழுந்து விட்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட சார்லி சாப்ளின், ஏட்னாவை அழைத்து, 'அதிகமாய்க் குடிக்காதே, உன்னை மாதிரி நடிகைக்கு அது நல்லதில்லை !', என்று அறிவுரை சொன்னார். ஆனால், அவர் சொன்னதை ஏட்னா காதில் போட்டுக் கொள்ளவில்லை. எல்லா நினைவுகளையும் குடித்தே அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டவரைப் போல், ஏராளமாய்க் குடித்து, உடம்பைக் கெடுத்துக் கொண்டார். ஒரு காலத்தில் 'ஒல்லிக்குச்சி உடம்புக்காரி'யாக இருந்த ஏட்னா, இப்போது 'குண்டு கத்திரிக்காய்' அளவுக்குப் பெருத்திருந்தார். ஆகவே, அவரைத் தனது படங்களில் தொடர்ந்து நடிக்க வைக்க முடியாத நிலைமை சாப்ளினுக்கு. 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துக்காக சார்லி சாப்ளின் தயாரித்த 'The Pilgrim' திரைப்படம் தான் சாப்ளினும், ஏட்னாவும் இணைந்து நடித்த கடைசிப் படம். (அதன்பிறகு, சாப்ளின் வெவ்வேறு கதாநாயகிகளுடன் இணைந்து நடித்தார். என்றாலும், சார்லி சாப்ளின் - ஏட்னா பர்வியான்ஸ் ஜோடிக்குச் சமமாக, வேறு எந்த இணையையும் சொல்லமுடியாது !)
1923ம் ஆண்டுக்குப் பிறகு, சார்லி சாப்ளினின் படங்களில் ஏட்னா நாயகியாக நடிக்கவில்லை. என்றாலும், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பில் எந்தக் குறையும் இல்லை. சாப்ளின் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் கூட, ஏட்னாவின் அன்பான கடிதங்கள் அவரை அடிக்கடி நலம் விசாரிக்கும். ஒவ்வொரு கடிதத்தின் இறுதியிலும், தவறாமல் ஒரு நகைச்சுவைத் துணுக்கு ! ஏட்னாவின் நடிப்புத் திறன், நகைச்சுவைப் படங்களைத் தாண்டியும் வெளிப்பட வேண்டும் என்று விரும்பிய சார்லி சாப்ளின், அவருக்காகவே 'A Women of Paris' என்ற திரைப்படத்தை இயக்கித் தயாரித்தார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ஏட்னாவுக்கு, ரொம்பவும் சவாலான கதாபாத்திரம். அதை மிகச் சிறப்பாய்ச் செய்திருந்தார் அவர். ஆனால், இந்தப் படம் நன்றாக ஓடாத காரணத்தால், ஏட்னாவால் தனக்குரிய புகழைப் பெறமுடியவில்லை. இதில் சாப்ளினுக்கும் ரொம்ப வருத்தம். அதைத் தொடர்ந்து, ஏட்னா பர்வியான்ஸ் வேறு சில படங்களில் நடித்தார். ஆனால், எந்தப் படமும் அவருடைய 'பழைய' புகழ் வெளிச்சத்தை அவருக்குத் திரும்பப் பெற்றுத் தரவில்லை. சாப்ளினே அவருக்காக இன்னொரு படம் தயாரித்தார், ஆனால் அந்தப் படம் வெளியாகவே இல்லை. அதன் பின், ஏட்னா படங்களில் நடிக்கவில்லை. என்றாலும், 1958ம் ஆண்டு ஏட்னா மரணமடையும் வரை, அவரைத் தன் நிறுவனத்தின் கலைஞராகவே மதித்து, வாரம் தவறாமல் அவருக்கு சம்பளம் அனுப்பிக் கொண்டிருந்தார் சார்லி சாப்ளின். சாப்ளினின் வாழ்க்கையில் 'முதல் கலகப் போர்' என்று பேச ஆரம்பித்து, எங்கெங்கோ போய் விட்டோம்.
இப்போது மீண்டும் அந்த விஷயத்துக்குத் திரும்புவோம். சார்லி சாப்ளின் திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது, அவருக்கு வயது 25. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், உலகப் புகழ்பெற்ற நட்சத்திரமாகவும், அமெரிக்காவின் பெரும் பணக்காரக் கலைஞர்களில் ஒருவராகவும் விஸ்வரூபம் எடுத்தார் சாப்ளின். இப்படிப்பட்ட ஒருவர், முப்பது வயதை நெருங்கியும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்கிறார் என்றால், சுற்றியிருக்கிறவர்களும், பத்திரிகைக்காரர்களும் சும்மா இருப்பார்களா ? 'எப்போ கல்யாணம் ?', 'யாரைக் கல்யாணம் ?', என்று அவரைப் பிய்த்துப் பிடுங்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கெல்லாம், தன்னுடைய டிரேட் மார்க் புன்னகையால் பதில் சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார் சார்லி சாப்ளின். ஆனால், உள்ளுக்குள், 'எனக்குத் திருமணமெல்லாம் சரிப்படுமா ?', என்ற ஒரு கேள்வி அவரை உறுத்திக் கொண்டிருந்தது. ஒரு பெண்ணை மணக்கிற போது, அதோடு தனது சுதந்திரமும் மொத்தமாய்க் காணாமல் போய் விடும் என்று அவர் உறுதியாக நம்பினார். கல்யாணம் என்றால் சாதாரண விஷயமா ? இப்போது, ஒரு சிறிய அறையில் தங்கிக்
ுவர் மிஞ்சும் விதத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம். பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் புகழ்பெற்ற சார்லி சாப்ளின், அமெரிக்கத் திரை வரலாற்றில் வேறு எந்தக் கலைஞரும் சம்பாதிக்காத அளவுக்கு பணத்தையும், புகழையும் சேர்த்தார். ஆனால், இந்தச் செல்வங்கள் அனைத்தும் தராத ஒரு நிம்மதியையும், முழுமையுணர்வையும், ஏட்னாவின் நட்பு அவருக்குக் கொடுத்தது. 'இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனிதன் நான் தான். என்னை இப்படிச் செய்தவள் நீதான்', என்று ஏட்னாவைப் பற்றி ஒருமுறை எழுதியிருக்கிறார் சார்லி சாப்ளின்.
இதுபோன்ற குறிப்புகளை வைத்துக் கொண்டு, சாப்ளினும், ஏட்னாவும் காதலிக்கிறார்கள் என்று பலரும் நம்பினார்கள். அவர்கள் ஊகித்தது உண்மையோ, பொய்யோ, கடைசி வரை அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், நல்ல நண்பர்களாகத் தொடர்ந்தார்கள்.
பின்னர், சாப்ளின் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட போது, ஏட்னாவால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், அதனால் மனமுடைந்து, அவர் குடிப் பழக்கத்தில் விழுந்து விட்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட சார்லி சாப்ளின், ஏட்னாவை அழைத்து, 'அதிகமாய்க் குடிக்காதே, உன்னை மாதிரி நடிகைக்கு அது நல்லதில்லை !', என்று அறிவுரை சொன்னார். ஆனால், அவர் சொன்னதை ஏட்னா காதில் போட்டுக் கொள்ளவில்லை. எல்லா நினைவுகளையும் குடித்தே அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டவரைப் போல், ஏராளமாய்க் குடித்து, உடம்பைக் கெடுத்துக் கொண்டார். ஒரு காலத்தில் 'ஒல்லிக்குச்சி உடம்புக்காரி'யாக இருந்த ஏட்னா, இப்போது 'குண்டு கத்திரிக்காய்' அளவுக்குப் பெருத்திருந்தார். ஆகவே, அவரைத் தனது படங்களில் தொடர்ந்து நடிக்க வைக்க முடியாத நிலைமை சாப்ளினுக்கு. 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துக்காக சார்லி சாப்ளின் தயாரித்த 'The Pilgrim' திரைப்படம் தான் சாப்ளினும், ஏட்னாவும் இணைந்து நடித்த கடைசிப் படம். (அதன்பிறகு, சாப்ளின் வெவ்வேறு கதாநாயகிகளுடன் இணைந்து நடித்தார். என்றாலும், சார்லி சாப்ளின் - ஏட்னா பர்வியான்ஸ் ஜோடிக்குச் சமமாக, வேறு எந்த இணையையும் சொல்லமுடியாது !)
1923ம் ஆண்டுக்குப் பிறகு, சார்லி சாப்ளினின் படங்களில் ஏட்னா நாயகியாக நடிக்கவில்லை. என்றாலும், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பில் எந்தக் குறையும் இல்லை. சாப்ளின் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் கூட, ஏட்னாவின் அன்பான கடிதங்கள் அவரை அடிக்கடி நலம் விசாரிக்கும். ஒவ்வொரு கடிதத்தின் இறுதியிலும், தவறாமல் ஒரு நகைச்சுவைத் துணுக்கு ! ஏட்னாவின் நடிப்புத் திறன், நகைச்சுவைப் படங்களைத் தாண்டியும் வெளிப்பட வேண்டும் என்று விரும்பிய சார்லி சாப்ளின், அவருக்காகவே 'A Women of Paris' என்ற திரைப்படத்தை இயக்கித் தயாரித்தார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ஏட்னாவுக்கு, ரொம்பவும் சவாலான கதாபாத்திரம். அதை மிகச் சிறப்பாய்ச் செய்திருந்தார் அவர். ஆனால், இந்தப் படம் நன்றாக ஓடாத காரணத்தால், ஏட்னாவால் தனக்குரிய புகழைப் பெறமுடியவில்லை. இதில் சாப்ளினுக்கும் ரொம்ப வருத்தம். அதைத் தொடர்ந்து, ஏட்னா பர்வியான்ஸ் வேறு சில படங்களில் நடித்தார். ஆனால், எந்தப் படமும் அவருடைய 'பழைய' புகழ் வெளிச்சத்தை அவருக்குத் திரும்பப் பெற்றுத் தரவில்லை. சாப்ளினே அவருக்காக இன்னொரு படம் தயாரித்தார், ஆனால் அந்தப் படம் வெளியாகவே இல்லை. அதன் பின், ஏட்னா படங்களில் நடிக்கவில்லை. என்றாலும், 1958ம் ஆண்டு ஏட்னா மரணமடையும் வரை, அவரைத் தன் நிறுவனத்தின் கலைஞராகவே மதித்து, வாரம் தவறாமல் அவருக்கு சம்பளம் அனுப்பிக் கொண்டிருந்தார் சார்லி சாப்ளின். சாப்ளினின் வாழ்க்கையில் 'முதல் கலகப் போர்' என்று பேச ஆரம்பித்து, எங்கெங்கோ போய் விட்டோம்.
இப்போது மீண்டும் அந்த விஷயத்துக்குத் திரும்புவோம். சார்லி சாப்ளின் திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது, அவருக்கு வயது 25. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், உலகப் புகழ்பெற்ற நட்சத்திரமாகவும், அமெரிக்காவின் பெரும் பணக்காரக் கலைஞர்களில் ஒருவராகவும் விஸ்வரூபம் எடுத்தார் சாப்ளின். இப்படிப்பட்ட ஒருவர், முப்பது வயதை நெருங்கியும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்கிறார் என்றால், சுற்றியிருக்கிறவர்களும், பத்திரிகைக்காரர்களும் சும்மா இருப்பார்களா ? 'எப்போ கல்யாணம் ?', 'யாரைக் கல்யாணம் ?', என்று அவரைப் பிய்த்துப் பிடுங்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கெல்லாம், தன்னுடைய டிரேட் மார்க் புன்னகையால் பதில் சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார் சார்லி சாப்ளின். ஆனால், உள்ளுக்குள், 'எனக்குத் திருமணமெல்லாம் சரிப்படுமா ?', என்ற ஒரு கேள்வி அவரை உறுத்திக் கொண்டிருந்தது. ஒரு பெண்ணை மணக்கிற போது, அதோடு தனது சுதந்திரமும் மொத்தமாய்க் காணாமல் போய் விடும் என்று அவர் உறுதியாக நம்பினார். கல்யாணம் என்றால் சாதாரண விஷயமா ? இப்போது, ஒரு சிறிய அறையில் தங்கிக்