t' முக்கியமான ஒரு படைப்பு. அமெரிக்காவுக்கு வருகிற ஒரு கப்பலில், சார்லி சாப்ளினும், பிறரும் அடிக்கிற லூட்டிகளோடு படம் தொடங்குகிறது. அந்தக் கப்பலில் சாப்ளின் ஒரு அழகிய பெண்ணையும், அவளுடைய அம்மாவையும் சந்திக்கிறார். அவர்களோடு நன்கு பழக்கமாவதற்குள், அமெரிக்கா குறுக்கிடுகிறது, 'அப்புறம் பார்க்கலாம்', என்று விடைபெற்றுக் கொண்டு, ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து போகிறார்கள். பின்னர், அமெரிக்காவின் தெருக்களில், பிழைப்புக்கு வழி தெரியாமல் திணறும் சார்லி சாப்ளின், அவரை மீண்டும் சந்திக்கும் அந்தக் 'கப்பல்' பெண், சில பல வேடிக்கைச் சம்பங்களுக்குப் பின், அவர்களிடையே காதல், கல்யாணம் என்று படம் நகர்கிறது. ஆனால், விநாடிக்கு ஒரு கலாட்டா என்ற விகிதத்தில் நகைச் சுவையை அள்ளித் தெறித்த இந்தக் கலகலப்பான படத்தின் நடுவே, ஒரு உருக்கமான காட்சி - படத்தில் சில விநாடிகளே இடம் பெறும் அந்தக் காட்சியை, ரசிகர்கள் கொஞ்சம் கண்ணிமைத்தாலும் தவற விட்டு விடச் சாத்தியமுண்டு. ஆனால், அந்தச் சிறிய காட்சியை கவனித்துப் பார்க்கிற போது, மௌனத் திரைப்படங்களின் பலவீனங்களைக் கூட நுட்பமான கதை சொல்லும் உத்தியாகப் பயன் படுத்தும் சார்லி சாப்ளினின் ஆளுமை வெளிப் படுகிறது. கப்பலில் சாப்ளின் சந்தித்த அந்தப் பெண், இப்போது ஒரு உணவகத்தில் அமர்ந்திருக்கிறாள். முகத்தில் சோகம், ஆனால், அது ஏன் என்று தெரியவில்லை. அப்போது, அவளைப் பார்க்கும் சார்லி சாப்ளின், பழைய ஞாபகத்தில் உற்சாகமாக அவளை அழைக்கிறார். அவளும் அவருக்கு அருகே வந்து அமர்கிறாள், 'ஏன் இப்படி உன் முகம் சோகமா இருக்கு ?', என்பது போல் சைகை செய்கிறார் சாப்ளின். அவள் பதில் பேசவில்லை. கையிலிருந்த ஒரு கைக்கு ட்டையை விரித்துக் காண்பிக்கிறாள். சட்டென்று சாப்ளினின் முகத்திலும் சோகம் கவிகிறது. அவர் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயல்கிறார். மௌனப்படம் என்பதால், 'என்னாச்சு ?', என்ற சைகைக்கு, அவளால் விரிவாக பதில் சொல்ல முடியாது. ஆனால், அந்தக் கைக்குட்டையைப் பார்த்ததும் சாப்ளினுக்கு என்ன புரிந்தது ? முதல் காட்சியில், (கப்பலில்) சாப்ளின் அந்தப் பெண்ணைச் சந்தித்த போது, அவளோடு, அவளுடைய அம்மாவும் இருந்தார். அப்போது, அவர் தலையில் கட்டியிருந்த கைக் குட்டை தான், இப்போது அந்தப் பெண்ணின் கையில் இருக்கிறது. அதாவது, அம்மா இறந்து விட்டார், அந்தச் சோகம் தான் அவளுக்கு. நகைச்சுவைப் படம் தான். என்றாலும், அதனுள் கொஞ்சூண்டு செருகப் பட்டிருக்கும் இந்தச் சோகம், பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாய்ப் பதிந்து விடுகிறது. நுணுக்கமான இந்தக் காட்சியைப் போலவே, இன்னும் பல உதாரணங்களை சாப்ளினின் 'ம்யூச்சுவல்' காலப் படங்களில் பார்க்கலாம். இந்தப் படங்களின் மூலம், சார்லி சாப்ளினின் கதாபாத்திரம், நம் எல்லோரையும் போல, ஆசாபாசங்களுடன்கூடிய ஒரு சாதாரண மனிதனாக, மக்களிடையே மிகுந்த புகழ்பெற்றது. இந்த 12 படங்களுடன், 'ம்யூச்சுவல்' நிறுவனத்துடனான சார்லி சாப்ளினின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, மேலும் பன்னிரண்டு படங்களுக்காக, சாப்ளினுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள முன்வந்தது 'ம்யூச்சுவல்'. இதற்காக, அவருக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பளம் தருவதற்கு முன் வந்தார்கள். ஒரு மில்லியன் என்பது, பத்து லட்சம் டாலர் - இப்போதைய மதிப்பில், கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் ! அப்படியானால், அந்தக் காலத்தில் அதற்கு எத்தனை மதிப்பு இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அது வரை திரைப்பட சரித்திரத்தில் வேறு எந்த நடிகரும், இப்படியொரு பெருந் தொகையைச் சம்பளமாய் வாங்கியதில்லை ! ஆனாலும், 'ம்யூச்சுவல்' நிறுவனத்தின் இந்தக் கோரிக்கையை சாப்ளின் ஏற்கவில்லை. ஏன் ? ஒரு மில்லியன் டாலர் சம்பளம் என்றால், கசக்கிறதா ? இந்த 'மில்லியன் டாலர் கேள்வி'க்கான பதிலை அறிய வேண்டுமானால், அப்போதைய சார்லி சாப்ளினின் மனோ நிலையை நாம் புரிந்து கொள்ளவேண்டும் . அவருக்கு 'ம்யூச்சுவல்' நிறுவனத்தை ரொம்பப் பிடித்திருந்தது, 'கீஸ்டோன்'போல, இவர்கள் அவரை அவசரப் படுத்தவில்லை. 'எஸ்னே'போல, பழைய படங்களை ஒட்டுப் போட்டு அல்பத்தனம் செய்யவில்லை. என்றாலும், அவர்களோடு தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என்று சார்லி சாப்ளினுக்கு விருப்பமில்லை.
ஏன் ? 1914ம் ஆண்டு, திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு வருடமும், வெவ்வேறு நிறுவனங்களுக்குத் தாவிக் கொண்டேயிருந்தார் சார்லி சாப்ளின். ஒவ்வொரு தாவலின் போதும், அவருடைய சம்பளம் பலமடங்காய் உயர்ந்தது. என்றாலும், பணத்துக்காக மட்டும்தான் அவர் அப்படிச் செய்தார் என்று சொல்லி விடமுடியாது. அதையும் தாண்டி, வேறொரு விருப்பம் அவரைச் செலுத்திக் கொண்டிருந்தது. சாப்ளின் போன்ற அற்புதமான கலைஞர்கள், தன்னிச்சையாய் இயங்க விரும்புகிறவர்கள். வேறொரு பட நிறுவனமோ, நடிகர்களோ, அரசாங்கமோ, அல்லது வேறு அம்சங்களோ தங்களைக் கட்டுப்படுத்துவதை, அவர்கள் கொஞ்சமும் விரும்ப மாட்டார்கள். ஆகவேதான், சினிமாவில் எத்தனை சம்பாதித்
t' முக்கியமான ஒரு படைப்பு. அமெரிக்காவுக்கு வருகிற ஒரு கப்பலில், சார்லி சாப்ளினும், பிறரும் அடிக்கிற லூட்டிகளோடு படம் தொடங்குகிறது. அந்தக் கப்பலில் சாப்ளின் ஒரு அழகிய பெண்ணையும், அவளுடைய அம்மாவையும் சந்திக்கிறார். அவர்களோடு நன்கு பழக்கமாவதற்குள், அமெரிக்கா குறுக்கிடுகிறது, 'அப்புறம் பார்க்கலாம்', என்று விடைபெற்றுக் கொண்டு, ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து போகிறார்கள். பின்னர், அமெரிக்காவின் தெருக்களில், பிழைப்புக்கு வழி தெரியாமல் திணறும் சார்லி சாப்ளின், அவரை மீண்டும் சந்திக்கும் அந்தக் 'கப்பல்' பெண், சில பல வேடிக்கைச் சம்பங்களுக்குப் பின், அவர்களிடையே காதல், கல்யாணம் என்று படம் நகர்கிறது. ஆனால், விநாடிக்கு ஒரு கலாட்டா என்ற விகிதத்தில் நகைச் சுவையை அள்ளித் தெறித்த இந்தக் கலகலப்பான படத்தின் நடுவே, ஒரு உருக்கமான காட்சி - படத்தில் சில விநாடிகளே இடம் பெறும் அந்தக் காட்சியை, ரசிகர்கள் கொஞ்சம் கண்ணிமைத்தாலும் தவற விட்டு விடச் சாத்தியமுண்டு. ஆனால், அந்தச் சிறிய காட்சியை கவனித்துப் பார்க்கிற போது, மௌனத் திரைப்படங்களின் பலவீனங்களைக் கூட நுட்பமான கதை சொல்லும் உத்தியாகப் பயன் படுத்தும் சார்லி சாப்ளினின் ஆளுமை வெளிப் படுகிறது. கப்பலில் சாப்ளின் சந்தித்த அந்தப் பெண், இப்போது ஒரு உணவகத்தில் அமர்ந்திருக்கிறாள். முகத்தில் சோகம், ஆனால், அது ஏன் என்று தெரியவில்லை. அப்போது, அவளைப் பார்க்கும் சார்லி சாப்ளின், பழைய ஞாபகத்தில் உற்சாகமாக அவளை அழைக்கிறார். அவளும் அவருக்கு அருகே வந்து அமர்கிறாள், 'ஏன் இப்படி உன் முகம் சோகமா இருக்கு ?', என்பது போல் சைகை செய்கிறார் சாப்ளின். அவள் பதில் பேசவில்லை. கையிலிருந்த ஒரு கைக்கு ட்டையை விரித்துக் காண்பிக்கிறாள். சட்டென்று சாப்ளினின் முகத்திலும் சோகம் கவிகிறது. அவர் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயல்கிறார். மௌனப்படம் என்பதால், 'என்னாச்சு ?', என்ற சைகைக்கு, அவளால் விரிவாக பதில் சொல்ல முடியாது. ஆனால், அந்தக் கைக்குட்டையைப் பார்த்ததும் சாப்ளினுக்கு என்ன புரிந்தது ? முதல் காட்சியில், (கப்பலில்) சாப்ளின் அந்தப் பெண்ணைச் சந்தித்த போது, அவளோடு, அவளுடைய அம்மாவும் இருந்தார். அப்போது, அவர் தலையில் கட்டியிருந்த கைக் குட்டை தான், இப்போது அந்தப் பெண்ணின் கையில் இருக்கிறது. அதாவது, அம்மா இறந்து விட்டார், அந்தச் சோகம் தான் அவளுக்கு. நகைச்சுவைப் படம் தான். என்றாலும், அதனுள் கொஞ்சூண்டு செருகப் பட்டிருக்கும் இந்தச் சோகம், பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாய்ப் பதிந்து விடுகிறது. நுணுக்கமான இந்தக் காட்சியைப் போலவே, இன்னும் பல உதாரணங்களை சாப்ளினின் 'ம்யூச்சுவல்' காலப் படங்களில் பார்க்கலாம். இந்தப் படங்களின் மூலம், சார்லி சாப்ளினின் கதாபாத்திரம், நம் எல்லோரையும் போல, ஆசாபாசங்களுடன்கூடிய ஒரு சாதாரண மனிதனாக, மக்களிடையே மிகுந்த புகழ்பெற்றது. இந்த 12 படங்களுடன், 'ம்யூச்சுவல்' நிறுவனத்துடனான சார்லி சாப்ளினின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, மேலும் பன்னிரண்டு படங்களுக்காக, சாப்ளினுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள முன்வந்தது 'ம்யூச்சுவல்'. இதற்காக, அவருக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பளம் தருவதற்கு முன் வந்தார்கள். ஒரு மில்லியன் என்பது, பத்து லட்சம் டாலர் - இப்போதைய மதிப்பில், கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் ! அப்படியானால், அந்தக் காலத்தில் அதற்கு எத்தனை மதிப்பு இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அது வரை திரைப்பட சரித்திரத்தில் வேறு எந்த நடிகரும், இப்படியொரு பெருந் தொகையைச் சம்பளமாய் வாங்கியதில்லை ! ஆனாலும், 'ம்யூச்சுவல்' நிறுவனத்தின் இந்தக் கோரிக்கையை சாப்ளின் ஏற்கவில்லை. ஏன் ? ஒரு மில்லியன் டாலர் சம்பளம் என்றால், கசக்கிறதா ? இந்த 'மில்லியன் டாலர் கேள்வி'க்கான பதிலை அறிய வேண்டுமானால், அப்போதைய சார்லி சாப்ளினின் மனோ நிலையை நாம் புரிந்து கொள்ளவேண்டும் . அவருக்கு 'ம்யூச்சுவல்' நிறுவனத்தை ரொம்பப் பிடித்திருந்தது, 'கீஸ்டோன்'போல, இவர்கள் அவரை அவசரப் படுத்தவில்லை. 'எஸ்னே'போல, பழைய படங்களை ஒட்டுப் போட்டு அல்பத்தனம் செய்யவில்லை. என்றாலும், அவர்களோடு தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என்று சார்லி சாப்ளினுக்கு விருப்பமில்லை.
ஏன் ? 1914ம் ஆண்டு, திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு வருடமும், வெவ்வேறு நிறுவனங்களுக்குத் தாவிக் கொண்டேயிருந்தார் சார்லி சாப்ளின். ஒவ்வொரு தாவலின் போதும், அவருடைய சம்பளம் பலமடங்காய் உயர்ந்தது. என்றாலும், பணத்துக்காக மட்டும்தான் அவர் அப்படிச் செய்தார் என்று சொல்லி விடமுடியாது. அதையும் தாண்டி, வேறொரு விருப்பம் அவரைச் செலுத்திக் கொண்டிருந்தது. சாப்ளின் போன்ற அற்புதமான கலைஞர்கள், தன்னிச்சையாய் இயங்க விரும்புகிறவர்கள். வேறொரு பட நிறுவனமோ, நடிகர்களோ, அரசாங்கமோ, அல்லது வேறு அம்சங்களோ தங்களைக் கட்டுப்படுத்துவதை, அவர்கள் கொஞ்சமும் விரும்ப மாட்டார்கள். ஆகவேதான், சினிமாவில் எத்தனை சம்பாதித்