ு காட்டிய அதீத கவனமும், அதனால் (அவரை அறியாமலே) வீட்டை, மனைவியை அலட்சியப் படுத்திய குணமும், 'என்னை மணக்கிற பெண், என்னையும், என் வீட்டையும் தான் முதலில் கவனிக்க வேண்டும்', என்று அவர் முரட்டுப் பிடிவாதமாய் இருந்ததும், அதனால், அவருடைய மனைவிகள், தங்களுக்கென்று ஒரு புற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமுடியாதபடி, வீட்டிலேயே, அதுவும் தனிமையில் முடங்கிக் கிடக்க நேரிட்டு விடுவதும் தான், அவருடைய ஒவ்வொரு திருமணத்தின் முறிவுக்கும் முக்கியமான காரணங்களாய் இருந்திருக்கிறது. என்றாலும், அவர் நான்காவதாக ஒரு பெண்ணைக் காதலித்து மணந்தார். அவர் நெடுநாளாய்த் தேடிக் கொண்டிருந்த 'சந்தோஷமான மணவாழ்க்கை', கடைசியாய் அவருக்குக் கிடைத்து விட்டது. சாப்ளினின் நான்காவது திருமணத்தைப் பற்றி உரிய சந்தர்ப்பத்தில் விளக்கமாய்ப் பார்க்கலாம்.
இப்போது, நாம் மீண்டும் 1917ம் ஆண்டுக்குத் திரும்பியாக வேண்டும். அங்கே ஒரு மிகப் பெரிய பிரச்சனை முளைத்திருக்கிறது - சார்லி சாப்ளினையும், அவருடைய சக கலைஞர்களையும், பட முதலாளிகள் திட்டமிட்டு நசுக்கப் பார்க்கிறார்கள்.
என். சொக்கன்.
*பகிர்வு*
*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈*
>>Click here to continue<<