பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.' அதுவரை ஒரு திரைப்படத்தைக் கூட இயக்கியிருக்காத, ஒரு இயக்குநரிடம் கூட உதவியாளராய்ப் பணியாற்றியிருக்காத சாப்ளின், இது போன்ற ஒரு 'வாழ்வா, சாவா' சவாலுக்குத் துணிந்திருக்கிறார் என்றால், அவருக்குத் தன்னுடைய திறமையில் எப்படியொரு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் என்று நாம் ஊகித்துக் கொள்ளலாம். அது தான் சாப்ளின் !
சிறு வயது முதலே, அவருக்குத் தன்னுடைய திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. மிகவும் சிரமமான காலகட்டங்களில் கூட, வாழ்க்கை வசதிகள் இல்லையே என்று தான் அவர் கவலைப்பட்டாரேயொழிய, தன்னால் ஜெயிக்க முடியாதோ என்று அவர் சந்தேகப் பட்டதில்லை. அந்த நம்பிக்கை தான், இப்படியொரு பெரிய 'ரிஸ்க்' எடுக்கும்படி அவரைத் தூண்டியது.
சார்லி சாப்ளினின் இந்தத் தன்னம்பிக்கையை மாக் சென்னெட் ரசித்தார், மதித்தார். என்றாலும், உடனடியாக அவருக்கு இயக்குநர் வாய்ப்புத் தரவில்லை. 'இன்னும் கொஞ்ச காலம் போகட்டும்', என்று விஷயத்தை ஆறப் போட்டார். அதேசமயம், சார்லி சாப்ளினின் 'Tramp' கதாபாத்திரத்தை முன்வைத்து, அடுத்தடுத்த திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. பெரும்பாலான படங்களில் 'சும்மா' வந்து போகிற வேஷம் தான். என்றாலும், தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறை, புதுமையான நகைச்சுவை பாணியின் மூலம் மக்களிடையே பரவலாய் நல்ல வரவேற்பைப் பெற்றார் சார்லி சாப்ளின். உண்மையில், அவருடைய பெயர்கூட ரசிகர்கள் மனதில் அவ்வளவாய்ப் பதியவில்லை. விநோதமாய் உடுத்தியிருந்த அவருடைய கதாபாத்திரம் தான் சட்டென்று எல்லோருக்குள்ளும் இடம் பிடித்து விட்டது.
தியேட்டர் வாசல்களில், சாப்ளினின் 'Tramp' உருவத்தை மட்டும் ஓவியமாய்த் தீட்டி வைத்தார்கள். அதைப் பார்த்ததும், மக்கள் கூட்டம் வந்து குவிந்தது, விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது. சென்ற அத்தியாயத்திலிருந்து, 'Tramp' என்ற வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம்.
யார் அந்த Tramp ? அகராதியைப் புரட்டி, 'Tramp' என்னும் வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால், முழநீளத்துக்கு விளக்கம் கிடைக்கிறது. வீடு இல்லாதவன், வேலை இல்லாதவன், பரம ஏழை, ஒரு இலக்கில்லாமல் நெடுந்தூரம் பயணிப்பவன், எங்கே சென்றாலும் நடந்தே செல்பவன். ஏதாவது எடுபிடி வேலைகள் கிடைத்தால், அதைச் செய்வான், இல்லாவிட்டால், பிச்சை எடுப்பான் ... - இதையெல்லாம் படிக்கும்போது, 'Tramp' என்று குறிப்பிடப்படும் அந்த மனிதர்கள் மீது நமக்குப் பரிதாபம் தான் வருகிறது. ஆனால், அந்தப் பரிதாபத்தையே, தன்னுடைய நகைச்சுவைக்குப் பயன்படுத்திக் கொண்ட புத்திசாலிக் கலைஞர் சார்லி சாப்ளின்.
அவருடைய ஆரம்ப காலப் படங்கள் ஒன்றிரண்டு, கடைசிப் படங்கள் நான்கு - இவற்றைத் தவிர, மற்ற அனைத்து படங்களிலும், இந்த 'Tramp' வேஷத்தைத் தான், வெவ்வேறு விதமாய்ச் செய்திருக்கிறார் சார்லி சாப்ளின். தொடக்கத்தில் சாதாரணமான கோமாளியாக ஆரம்பித்த இந்தக் கதாபாத்திரம், மெல்ல மெல்ல வடிவம் பெற்று, முதிர்ச்சியடைந்து, பலவிதமான உணர்வுகளைப் பெற்று, ரசிகர்களை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்து, பின்னர், உணர்ச்சி வயப்பட்டு அழவைத்து, பத்து ஆண்டுகளுக்குள் சாப்ளினின் இந்த வேஷம் சாகாவரம் பெற்று விட்டது !
ஆனால், அது வரை சார்லி சாப்ளின் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருந்தது. அவருடைய அதீத புத்திசாலித்தனமும், புதிய முயற்சிகளும், அவருடைய கம்பெனியில் அவருக்குக் கெட்ட பெயரைத் தான் தேடித் தந்தன. அவருடைய டைரக்டர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை. சக நடிகர்களுக்கும் அவரைப் பார்த்தால் பொறாமை. அவர் ரொம்ப அழுக்காக இருக்கிறார். ஒழுங்காய்க் குளிப்பதில்லை. பல நாள்களுக்கு, ஒரே துணியைத் துவைக்காமல் மீண்டும், மீண்டும் அணிகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. சிறுவயது போலவே, இங்கேயும் சாப்ளினுக்கு நண்பர்களே இல்லை. அதற்காக சாப்ளின் வருத்தப்பட்டுக் கொண்டு சும்மா இருந்து விடவில்லை. இன்று இல்லாவிட்டாலும், நாளை தனக்கு 'இயக்குநர்' பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், தன்னுடைய படத்துக்கான புதுப்புது கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள், காட்சி அமைப்புகள் என்று மனதினுள் ஒரு இயக்குனராகவே வாழ்ந்து கொண்டிருந்தார் அவர்.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கூட, அவர் வம்பு வழக்குகளைத் தேடிப் போவதில்லை. ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்திருப்பார். யாரேனும் அவரிடம் பேசினால் பதில் பேசுவார். மற்றபடி அவருடைய உலகம் தனி. ஆனால் அதே சமயம், சாப்ளின் எத்தனை தான் முயன்றாலும், அவரால் 'வெறும்' நடிகராக மட்டும் இருந்து விட்டுப் போக முடியவில்லை. அவர் நடிக்கும் படங்களிலெல்லாம், அவருக்கு ஒவ்வொரு காட்சி விவரிக்கப்படும் போதும், இதையே வேறு விதமாய்ச் செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்றுதான் அவருடைய சிந்தனை ஓடியது. அதைத் தனக்குள் வைத்துக் கொள்ளாமல், தன்னுடைய படத்தின் இயக்குனர்களிடம் சொல்ல, அவர்கள் கோபமாகிக் கத்துவார்கள். மறுபடி ஒரு கலாட்டா தொடங்கும். இத்தனைக்
பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.' அதுவரை ஒரு திரைப்படத்தைக் கூட இயக்கியிருக்காத, ஒரு இயக்குநரிடம் கூட உதவியாளராய்ப் பணியாற்றியிருக்காத சாப்ளின், இது போன்ற ஒரு 'வாழ்வா, சாவா' சவாலுக்குத் துணிந்திருக்கிறார் என்றால், அவருக்குத் தன்னுடைய திறமையில் எப்படியொரு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் என்று நாம் ஊகித்துக் கொள்ளலாம். அது தான் சாப்ளின் !
சிறு வயது முதலே, அவருக்குத் தன்னுடைய திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. மிகவும் சிரமமான காலகட்டங்களில் கூட, வாழ்க்கை வசதிகள் இல்லையே என்று தான் அவர் கவலைப்பட்டாரேயொழிய, தன்னால் ஜெயிக்க முடியாதோ என்று அவர் சந்தேகப் பட்டதில்லை. அந்த நம்பிக்கை தான், இப்படியொரு பெரிய 'ரிஸ்க்' எடுக்கும்படி அவரைத் தூண்டியது.
சார்லி சாப்ளினின் இந்தத் தன்னம்பிக்கையை மாக் சென்னெட் ரசித்தார், மதித்தார். என்றாலும், உடனடியாக அவருக்கு இயக்குநர் வாய்ப்புத் தரவில்லை. 'இன்னும் கொஞ்ச காலம் போகட்டும்', என்று விஷயத்தை ஆறப் போட்டார். அதேசமயம், சார்லி சாப்ளினின் 'Tramp' கதாபாத்திரத்தை முன்வைத்து, அடுத்தடுத்த திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. பெரும்பாலான படங்களில் 'சும்மா' வந்து போகிற வேஷம் தான். என்றாலும், தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறை, புதுமையான நகைச்சுவை பாணியின் மூலம் மக்களிடையே பரவலாய் நல்ல வரவேற்பைப் பெற்றார் சார்லி சாப்ளின். உண்மையில், அவருடைய பெயர்கூட ரசிகர்கள் மனதில் அவ்வளவாய்ப் பதியவில்லை. விநோதமாய் உடுத்தியிருந்த அவருடைய கதாபாத்திரம் தான் சட்டென்று எல்லோருக்குள்ளும் இடம் பிடித்து விட்டது.
தியேட்டர் வாசல்களில், சாப்ளினின் 'Tramp' உருவத்தை மட்டும் ஓவியமாய்த் தீட்டி வைத்தார்கள். அதைப் பார்த்ததும், மக்கள் கூட்டம் வந்து குவிந்தது, விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது. சென்ற அத்தியாயத்திலிருந்து, 'Tramp' என்ற வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம்.
யார் அந்த Tramp ? அகராதியைப் புரட்டி, 'Tramp' என்னும் வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால், முழநீளத்துக்கு விளக்கம் கிடைக்கிறது. வீடு இல்லாதவன், வேலை இல்லாதவன், பரம ஏழை, ஒரு இலக்கில்லாமல் நெடுந்தூரம் பயணிப்பவன், எங்கே சென்றாலும் நடந்தே செல்பவன். ஏதாவது எடுபிடி வேலைகள் கிடைத்தால், அதைச் செய்வான், இல்லாவிட்டால், பிச்சை எடுப்பான் ... - இதையெல்லாம் படிக்கும்போது, 'Tramp' என்று குறிப்பிடப்படும் அந்த மனிதர்கள் மீது நமக்குப் பரிதாபம் தான் வருகிறது. ஆனால், அந்தப் பரிதாபத்தையே, தன்னுடைய நகைச்சுவைக்குப் பயன்படுத்திக் கொண்ட புத்திசாலிக் கலைஞர் சார்லி சாப்ளின்.
அவருடைய ஆரம்ப காலப் படங்கள் ஒன்றிரண்டு, கடைசிப் படங்கள் நான்கு - இவற்றைத் தவிர, மற்ற அனைத்து படங்களிலும், இந்த 'Tramp' வேஷத்தைத் தான், வெவ்வேறு விதமாய்ச் செய்திருக்கிறார் சார்லி சாப்ளின். தொடக்கத்தில் சாதாரணமான கோமாளியாக ஆரம்பித்த இந்தக் கதாபாத்திரம், மெல்ல மெல்ல வடிவம் பெற்று, முதிர்ச்சியடைந்து, பலவிதமான உணர்வுகளைப் பெற்று, ரசிகர்களை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்து, பின்னர், உணர்ச்சி வயப்பட்டு அழவைத்து, பத்து ஆண்டுகளுக்குள் சாப்ளினின் இந்த வேஷம் சாகாவரம் பெற்று விட்டது !
ஆனால், அது வரை சார்லி சாப்ளின் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருந்தது. அவருடைய அதீத புத்திசாலித்தனமும், புதிய முயற்சிகளும், அவருடைய கம்பெனியில் அவருக்குக் கெட்ட பெயரைத் தான் தேடித் தந்தன. அவருடைய டைரக்டர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை. சக நடிகர்களுக்கும் அவரைப் பார்த்தால் பொறாமை. அவர் ரொம்ப அழுக்காக இருக்கிறார். ஒழுங்காய்க் குளிப்பதில்லை. பல நாள்களுக்கு, ஒரே துணியைத் துவைக்காமல் மீண்டும், மீண்டும் அணிகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. சிறுவயது போலவே, இங்கேயும் சாப்ளினுக்கு நண்பர்களே இல்லை. அதற்காக சாப்ளின் வருத்தப்பட்டுக் கொண்டு சும்மா இருந்து விடவில்லை. இன்று இல்லாவிட்டாலும், நாளை தனக்கு 'இயக்குநர்' பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், தன்னுடைய படத்துக்கான புதுப்புது கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள், காட்சி அமைப்புகள் என்று மனதினுள் ஒரு இயக்குனராகவே வாழ்ந்து கொண்டிருந்தார் அவர்.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கூட, அவர் வம்பு வழக்குகளைத் தேடிப் போவதில்லை. ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்திருப்பார். யாரேனும் அவரிடம் பேசினால் பதில் பேசுவார். மற்றபடி அவருடைய உலகம் தனி. ஆனால் அதே சமயம், சாப்ளின் எத்தனை தான் முயன்றாலும், அவரால் 'வெறும்' நடிகராக மட்டும் இருந்து விட்டுப் போக முடியவில்லை. அவர் நடிக்கும் படங்களிலெல்லாம், அவருக்கு ஒவ்வொரு காட்சி விவரிக்கப்படும் போதும், இதையே வேறு விதமாய்ச் செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்றுதான் அவருடைய சிந்தனை ஓடியது. அதைத் தனக்குள் வைத்துக் கொள்ளாமல், தன்னுடைய படத்தின் இயக்குனர்களிடம் சொல்ல, அவர்கள் கோபமாகிக் கத்துவார்கள். மறுபடி ஒரு கலாட்டா தொடங்கும். இத்தனைக்