கும், சாப்ளின் சொல்லும் யோசனைகள் எதுவும் மோசமானவை அல்ல. மேடை நாடகக் காலத்திலிருந்தே, எது செய்தால், எப்படிச் செய்தால் மக்கள் சிரிப்பார்கள் என்று துல்லியமாக நாடி பிடித்து அறிந்திருந்த கலைஞர் அவர். அந்த அனுபவத்திலிருந்துதான், அவருடைய புதுப்புது நகைச்சுவைச் சிந்தனைகள் பிறந்தன, அவற்றை ஏற்று ஆதரிக்கதான் ஆளில்லை. மாக் சென்னெடைத் தவிர, 'கீஸ்டோன்' நிறுவனத்திலிருந்த எந்த இயக்குனரோடும் சாப்ளினால் ஒத்துப் போக முடியவில்லை.
காரணம், சாப்ளின் சொல்லும் யோசனைகள், புதுப்புது காட்சி அமைப்புகள் - அவர் எது பேசினாலும், 'நேரம் இல்லை' என்றோ, 'இதெல்லாம் மேடையில் நடிக்கத் தான் சரிப்படும்' என்றோ ஒதுக்கித் தள்ளி விட்டு, தாங்கள் நினைத்தது போல் தான் படத்தை எடுத்தார்கள் அவர்கள். ஒரு வேளை, சாப்ளின் ரொம்பப் பிடிவாதம் பிடித்தால், அவர் விரும்புவது போல் காட்சியைப் படமாக்கி விட்டு, பின்னர் எடிட்டிங்கின் போது அதை வெட்டித் தள்ளி விடுவார்கள். இதையெல்லாம் நினைக்க நினைக்க, சாப்ளினுக்கு ஆதங்கம் கூடியது. போதாக்குறைக்கு, அவருடைய சில படங்களுக்கு, ஒரு இளம் பெண்ணை இயக்குனராக நியமித்தார்கள்.
இதில் சாப்ளினுக்குக் கொஞ்சமும் சம்மதமில்லை, 'அந்தப் பெண்ணுக்குமட்டும் என்ன பெரிய அனுபவம் இருக்கிறது என்று அவரை டைரக்ஷன் செய்ய அனுமதிக்கிறார்கள் ?', என்று தனக்குள் பொறுமினார். அவ்வப்போது மாக் சென்னெடை நேரில் சந்தித்த சாப்ளின், 'தனக்கு மேலும் சுதந்திரம் தேவை', என்று விடாமல் வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆகவே, ஒரு கட்டத்தில், அவரை உதவி இயக்குனராகப் பதவி உயர்த்தினார் சென்னெட். சாப்ளினின் திரை வாழ்க்கையில் முக்கியமான மாற்றம் அது. இனிமேல் அவர் வெறுமனே நடித்துவிட்டுப் போகாமல், தனக்குத் தோன்றும் யோசனைகளை இயக்குனரிடம் தைரியமாக சொல்ல முடியும். சாப்ளின் தான் உதவி இயக்குனர் என்பதால், 'போய்யா சர்த்தான்' என்று இயக்குனர் அவரைச் சுலபத்தில் நிராகரித்து விடமுடியாது. அவர் நடிக்கும் காட்சிகளை இஷ்டத்துக்கு வெட்டித் தள்ள முடியாது. அவர் சொல்லும் யோசனை நன்றாக இருந்தால், கண்டிப்பாக படத்தில் சேர்க்கப்படும். தன்னுடைய படங்களை இன்னும் கொஞ்சம் நன்றாகச் செதுக்கி வெளியிடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த சார்லி சாப்ளினுக்கு இது போதாதா ?
அடுத்து வெளிவந்த 'கீஸ்டோன்' படங்களில், சாப்ளினின் மேதைமை நன்றாக வெளிப்படத் தொடங்கியது. இப்படியாக, 'கீஸ்டோன்' நிறுவனத்தில் சேர்ந்த முதல் மூன்று மாதங்களுக்குள், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார் சாப்ளின். வாரம் ஒரு படமா என்று வாயைப் பிளக்க வேண்டாம் - அப்போதெல்லாம் ஒரு 'திரைப்படம்' என்பது, ஒரு ரீல், அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு ரீல். அவ்வளவு தான். மொத்தம் பதினைந்து அல்லது இருபத்தைந்து நிமிடங்களுக்குள் மொத்தப் படமும் ஓடி முடிந்துவிடும். ஆகவே, ஐந்தாறு நாள்கள் படப்பிடிப்பு நடித்தினால் போதும், ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட்டு விடலாம் !
தவிர, அந்தக் காலப் படங்களில் சப்தம் கிடையாது. எல்லாமே மௌனப் படங்கள் தான். ஆகவே, வசனம் எழுதுவது, பின்னணி இசை கோர்ப்பது போன்ற வேலைகள் இல்லை. இயக்குனர் மனதில் ஏதேனும் ஒரு நல்ல யோசனை அல்லது காட்சி தோன்றி விட்டால், நேராகப் படப்பிடிப்புக்குச் சென்று, ஒன்றிரண்டு முறை ஒத்திகை பார்த்து விட்டு, படமாக்கி முடித்து விடுவார்கள். இந்த 'அவசரம்', சாப்ளினுக்குப் பிடிக்கவில்லை. இப்படிப் பரபரவென்று படமெடுப்பதால் தான், கீஸ்டோன் ஸ்டூடியோ முழுவதும், தேர்தல் காலப் பொதுக்கூட்டம் போல ஒரு ஒழுங்கில்லாமல் கலைந்து கிடக்கிறது என்று நினைத்தார் அவர்.
நல்ல காட்சிகளை நிதானமாய்த் திட்டமிட்டு, நன்றாக ஒத்திகை பார்த்துப் படமெடுத்தால், இன்னும் சிறப்பான படங்களைத் தயாரிக்கமுடியும் என்பது அவருடைய நம்பிக்கை. ஆனால், அங்கிருந்த இயக்குனர்கள் யாரும் சாப்ளினின் கருத்தை மதிக்கவில்லை. எப்போதும் போல் அவசரப் படங்களை எடுத்துக் குவித்துக் கொண்டிருந்தார்கள். சாப்ளினும், வேண்டா வெறுப்பாக அந்தப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சீக்கிரத்திலேயே, சார்லி சாப்ளினுக்கு இயக்குனராகும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால், அவருடைய முதல் படம் எது என்பதில் தான் கொஞ்சம் குழப்பம். சாப்ளின் எழுதிய சுயசரிதையில், தான் இயக்கிய முதல் படம், 'Caught in the Rain' என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவர் தன்னுடைய சகோதரர் சிட்னிக்கு எழுதிய கடிதமொன்றில், அதற்கு முன் வெளிவந்த 'Twenty Minutes of Love' என்ற படத்தை, தன்னுடைய படம் என்று எழுதியிருக்கிறார். அதன்படி பார்க்கும் போது, அது தான் இயக்குனர் சாப்ளினின் முதல் படமாக இருக்க வேண்டும். எது எப்படியோ, சாப்ளினின் நெடு நாள் கனவு பலித்தது. அவர் இயக்குனராகி விட்டார். காமாசோமாவென்று படம் எடுத்துக் குவிக்காமல், பொறுமையாய்ச் சிந்தித்து, நல்ல படங்களாக எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன், தனது முதல் படத்தைத் தொடங்கினார். அந்தப் படம
கும், சாப்ளின் சொல்லும் யோசனைகள் எதுவும் மோசமானவை அல்ல. மேடை நாடகக் காலத்திலிருந்தே, எது செய்தால், எப்படிச் செய்தால் மக்கள் சிரிப்பார்கள் என்று துல்லியமாக நாடி பிடித்து அறிந்திருந்த கலைஞர் அவர். அந்த அனுபவத்திலிருந்துதான், அவருடைய புதுப்புது நகைச்சுவைச் சிந்தனைகள் பிறந்தன, அவற்றை ஏற்று ஆதரிக்கதான் ஆளில்லை. மாக் சென்னெடைத் தவிர, 'கீஸ்டோன்' நிறுவனத்திலிருந்த எந்த இயக்குனரோடும் சாப்ளினால் ஒத்துப் போக முடியவில்லை.
காரணம், சாப்ளின் சொல்லும் யோசனைகள், புதுப்புது காட்சி அமைப்புகள் - அவர் எது பேசினாலும், 'நேரம் இல்லை' என்றோ, 'இதெல்லாம் மேடையில் நடிக்கத் தான் சரிப்படும்' என்றோ ஒதுக்கித் தள்ளி விட்டு, தாங்கள் நினைத்தது போல் தான் படத்தை எடுத்தார்கள் அவர்கள். ஒரு வேளை, சாப்ளின் ரொம்பப் பிடிவாதம் பிடித்தால், அவர் விரும்புவது போல் காட்சியைப் படமாக்கி விட்டு, பின்னர் எடிட்டிங்கின் போது அதை வெட்டித் தள்ளி விடுவார்கள். இதையெல்லாம் நினைக்க நினைக்க, சாப்ளினுக்கு ஆதங்கம் கூடியது. போதாக்குறைக்கு, அவருடைய சில படங்களுக்கு, ஒரு இளம் பெண்ணை இயக்குனராக நியமித்தார்கள்.
இதில் சாப்ளினுக்குக் கொஞ்சமும் சம்மதமில்லை, 'அந்தப் பெண்ணுக்குமட்டும் என்ன பெரிய அனுபவம் இருக்கிறது என்று அவரை டைரக்ஷன் செய்ய அனுமதிக்கிறார்கள் ?', என்று தனக்குள் பொறுமினார். அவ்வப்போது மாக் சென்னெடை நேரில் சந்தித்த சாப்ளின், 'தனக்கு மேலும் சுதந்திரம் தேவை', என்று விடாமல் வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆகவே, ஒரு கட்டத்தில், அவரை உதவி இயக்குனராகப் பதவி உயர்த்தினார் சென்னெட். சாப்ளினின் திரை வாழ்க்கையில் முக்கியமான மாற்றம் அது. இனிமேல் அவர் வெறுமனே நடித்துவிட்டுப் போகாமல், தனக்குத் தோன்றும் யோசனைகளை இயக்குனரிடம் தைரியமாக சொல்ல முடியும். சாப்ளின் தான் உதவி இயக்குனர் என்பதால், 'போய்யா சர்த்தான்' என்று இயக்குனர் அவரைச் சுலபத்தில் நிராகரித்து விடமுடியாது. அவர் நடிக்கும் காட்சிகளை இஷ்டத்துக்கு வெட்டித் தள்ள முடியாது. அவர் சொல்லும் யோசனை நன்றாக இருந்தால், கண்டிப்பாக படத்தில் சேர்க்கப்படும். தன்னுடைய படங்களை இன்னும் கொஞ்சம் நன்றாகச் செதுக்கி வெளியிடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த சார்லி சாப்ளினுக்கு இது போதாதா ?
அடுத்து வெளிவந்த 'கீஸ்டோன்' படங்களில், சாப்ளினின் மேதைமை நன்றாக வெளிப்படத் தொடங்கியது. இப்படியாக, 'கீஸ்டோன்' நிறுவனத்தில் சேர்ந்த முதல் மூன்று மாதங்களுக்குள், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார் சாப்ளின். வாரம் ஒரு படமா என்று வாயைப் பிளக்க வேண்டாம் - அப்போதெல்லாம் ஒரு 'திரைப்படம்' என்பது, ஒரு ரீல், அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு ரீல். அவ்வளவு தான். மொத்தம் பதினைந்து அல்லது இருபத்தைந்து நிமிடங்களுக்குள் மொத்தப் படமும் ஓடி முடிந்துவிடும். ஆகவே, ஐந்தாறு நாள்கள் படப்பிடிப்பு நடித்தினால் போதும், ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட்டு விடலாம் !
தவிர, அந்தக் காலப் படங்களில் சப்தம் கிடையாது. எல்லாமே மௌனப் படங்கள் தான். ஆகவே, வசனம் எழுதுவது, பின்னணி இசை கோர்ப்பது போன்ற வேலைகள் இல்லை. இயக்குனர் மனதில் ஏதேனும் ஒரு நல்ல யோசனை அல்லது காட்சி தோன்றி விட்டால், நேராகப் படப்பிடிப்புக்குச் சென்று, ஒன்றிரண்டு முறை ஒத்திகை பார்த்து விட்டு, படமாக்கி முடித்து விடுவார்கள். இந்த 'அவசரம்', சாப்ளினுக்குப் பிடிக்கவில்லை. இப்படிப் பரபரவென்று படமெடுப்பதால் தான், கீஸ்டோன் ஸ்டூடியோ முழுவதும், தேர்தல் காலப் பொதுக்கூட்டம் போல ஒரு ஒழுங்கில்லாமல் கலைந்து கிடக்கிறது என்று நினைத்தார் அவர்.
நல்ல காட்சிகளை நிதானமாய்த் திட்டமிட்டு, நன்றாக ஒத்திகை பார்த்துப் படமெடுத்தால், இன்னும் சிறப்பான படங்களைத் தயாரிக்கமுடியும் என்பது அவருடைய நம்பிக்கை. ஆனால், அங்கிருந்த இயக்குனர்கள் யாரும் சாப்ளினின் கருத்தை மதிக்கவில்லை. எப்போதும் போல் அவசரப் படங்களை எடுத்துக் குவித்துக் கொண்டிருந்தார்கள். சாப்ளினும், வேண்டா வெறுப்பாக அந்தப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சீக்கிரத்திலேயே, சார்லி சாப்ளினுக்கு இயக்குனராகும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால், அவருடைய முதல் படம் எது என்பதில் தான் கொஞ்சம் குழப்பம். சாப்ளின் எழுதிய சுயசரிதையில், தான் இயக்கிய முதல் படம், 'Caught in the Rain' என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவர் தன்னுடைய சகோதரர் சிட்னிக்கு எழுதிய கடிதமொன்றில், அதற்கு முன் வெளிவந்த 'Twenty Minutes of Love' என்ற படத்தை, தன்னுடைய படம் என்று எழுதியிருக்கிறார். அதன்படி பார்க்கும் போது, அது தான் இயக்குனர் சாப்ளினின் முதல் படமாக இருக்க வேண்டும். எது எப்படியோ, சாப்ளினின் நெடு நாள் கனவு பலித்தது. அவர் இயக்குனராகி விட்டார். காமாசோமாவென்று படம் எடுத்துக் குவிக்காமல், பொறுமையாய்ச் சிந்தித்து, நல்ல படங்களாக எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன், தனது முதல் படத்தைத் தொடங்கினார். அந்தப் படம