*இணையற்ற நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு!*
*11. The Champion*
'ம்யூச்சுவல்' நிறுவனத்திலிருந்து வெளியேறிய பிறகு, சாப்ளின் தனது படங்களைத் தானே தயாரித்துக் கொள்வதாய் முடிவு செய்ததும், அவர் நீண்ட நாள்களாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'முழு' சுதந்திரம் அவருக்குக் கிடைத்தது. யாருடைய எதிர்பார்ப்புகள், கட்டளைகளுக்கும் பணிய வேண்டிய அவசியமில்லாமல், தான் விரும்பிய விதத்தில், தனக்கு முழுத் திருப்தி அளிக்கும் வகையில் படங்களை எடுக்க முடிந்தது. ஆனால், இந்த சவுகர்யம், வேறொரு விதத்தில் அவருக்குப் பெரிய பிரச்சனையைத் தந்து விட்டது. ஒவ்வொரு முறையும், அவர் முழுப் படத்தையும் எடுத்து முடித்த பிறகு, அதற்குச் செலவான தொகையைத் தரமுடியாது என்று அவருடைய விநியோக நிறுவனம் ('ஃபர்ஸ்ட் நேஷனல்') அடாவடி செய்யத் தொடங்கியது. உதாரணமாக, இரண்டு ரீல் அளவுள்ள ஒரு படத்தை சாப்ளின் இயக்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் படத்தை எடுப்பதற்கு அவருக்கு ஆறு மாதங்கள் ஆகிறது. இதற்காக, மொத்தம் நூறு ரூபாய் செலவு செய்கிறார். படம் தயாரானதும், அந்த நூறு ரூபாயை 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனம் கொடுத்து, படத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும். இது தான் ஒப்பந்தம். ஆனால், அவர் படத்தை எடுத்தபிறகு, 'சாப்ளினுக்கு மட்டும் ஏன் நூறு ரூபாய் தரவேண்டும் ? மற்ற இயக்குநர்களெல்லாம் இரண்டு ரீல் படத்துக்கு அறுபது ரூபாய் தானே செலவழிக்கிறார்கள் ?', என்று வீண் சண்டையைத் தொடங்கியது ஃபர்ஸ்ட் நேஷனல். இது என்ன நியாயம் ? சாப்ளினும், மற்ற இயக்குனர்களும் ஒன்றா ? படத்தின் அளவு தான் கணக்கா ? தரம் முக்கியமில்லையா ? - இது தான் சார்லி சாப்ளினின் வாதம், 'மற்றவர்களைப் போல் அரை குறை தரத்திலான படங்களை என்னால் எடுக்க முடியாது. என்னுடைய படங்களை, மிகச் சிறப்பாகத் தயாரிப்பதற்காக நான் கடுமையாய் முயல்கிறேன். ஆகவே, அதிக செலவு ஆவது சகஜம் தான். உங்களுக்கு நல்ல படங்கள் வேண்டுமானால், இந்தத் தொகையை நீங்கள் தந்தாக வேண்டும்' சாப்ளினின் பேச்சில் நியாயம் இருந்தாலும், ஒவ்வொரு முறையும், கடும் போராட்டத்துக்குப் பிறகு தான் அவரால் தன்னுடைய படங்களை வெளியிட முடிந்தது. சிறிது காலத்துக்குள், இந்த விளையாட்டு அவருக்குச் சலித்து விட்டது. கஷ்டப் பட்டுப் படம் எடுக்கிறோம். மக்களும் அதை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நம் படங்களை ரசிகர்களிடம் கொண்டு செல்ல முடியாதபடி நடுவே இந்தப் படக் கம்பெனிகளின் தடை. அந்தக் காலத்திலிருந்தே, திரைப்பட உலகத்தில் இந்தப் பிரிவினை உண்டாகி விட்டது. கலைஞர்களும், பட அதிபர்களும் ஒருவரையொருவர் விரோதிகள் போல் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நடிகர்கள், இயக்குனர்கள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்காக மக்கள் படம் பார்க்க வருகிறார்களா ? அல்லது, அவர்கள் தங்கள் படங்களை எடுப்பதற்குப் பணம் செலவழிக்கும் நிறுவனங்கள் தான் முக்கியமா ? இந்தப் பிரச்சனை சாப்ளினுக்கு மட்டுமின்றி, அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலருக்கும் இருப்பது தெரிய வந்தது. இத்தனைக்கும், இவர்கள் எல்லோரும் மக்களிடையே பெரிய புகழ் பெற்றவர்கள். ஆனால், எந்தப் பட நிறுவனமும், அந்தக் கலைஞர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை. இதைப்பற்றி சாப்ளின் தனது நண்பர்களிடம் தீவீரமாய் விவாதித்துக் கொண்டிருந்த போது தான், அதிர்ச்சி தரும் இன்னொரு தகவல் தெரிய வந்தது. அப்போதைய சில பெரிய பட நிறுவனங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கொண்டு, நடிகர்கள், இயக்குனர்களைத் தங்களின் விருப்பம் போல் ஆட்டி வைக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதாக ஒரு காற்று வழிச் செய்தி. விசாரித்த போது, இது உண்மையான தகவல் தான் என்று தெரிய வந்தது. 'மெகா' சூப்பர் மார்க்கெட்டுகள், உள்ளூரின் எளிய மளிகைக் கடைகளை நசுக்கி அழித்து விடுவது போல், பெரிய சினிமா கம்பெனிகள் சேர்ந்து, ஒரு மிகப் பெரிய நிறுவனத்தை உருவாக்கி, ஊரில் இருக்கும் சிறிய பட அதிபர்கள், கலைஞர்கள் எல்லோரையும் மொத்தமாய் ஒடுக்கி விடுவதாய் கொடூரத் திட்டம். இதைக் கேள்விப் பட்டதும், சாப்ளினும், அவருடைய சிநேகிதர்களும் ரொம்பவே எரிச்சலாகி விட்டார்கள். 'நாம் மூளையைக் கசக்கி, புதுமையான படங்களை எடுத்துத் தருவதும், அதை வைத்துக் கொண்டு இவர்கள் டாலர் மழையில் நீந்திக் குளிப்பதும் என்ன நியாயம் ?', என்று அவர்களே தங்களைக் கேட்டுக் கொண்டார்கள். 'உடனடியாக, இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று உணர்ச்சிவசப்பட்டார்கள். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு அட்டகாசமான யோசனை தோன்றியது. எத்தனை பெரிய பட அதிபர்கள் ஒன்றாக இணைந்தாலும், அவர்களிடம் ஏகப்பட்ட பணம் தான் இருக்கும். அதை மட்டும் வைத்துக் கொண்டு படம் எடுத்து விடமுடியாது. ஆகவே, கலைஞர்கள் இல்லாவிட்டால், எத்தனை பெரிய கம்பெனியும், காலி பெருங்காய டப்பாதான் ! - இந்தத் துருப்புச் சீட்டை வைத்துக் கொண்டு, பெரிய பண முதலைகளை எதிர்த்துப் போராடுவதாக அவர்கள் தீர்மானித்தார்கள்.
*இணையற்ற நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு!*
*11. The Champion*
'ம்யூச்சுவல்' நிறுவனத்திலிருந்து வெளியேறிய பிறகு, சாப்ளின் தனது படங்களைத் தானே தயாரித்துக் கொள்வதாய் முடிவு செய்ததும், அவர் நீண்ட நாள்களாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'முழு' சுதந்திரம் அவருக்குக் கிடைத்தது. யாருடைய எதிர்பார்ப்புகள், கட்டளைகளுக்கும் பணிய வேண்டிய அவசியமில்லாமல், தான் விரும்பிய விதத்தில், தனக்கு முழுத் திருப்தி அளிக்கும் வகையில் படங்களை எடுக்க முடிந்தது. ஆனால், இந்த சவுகர்யம், வேறொரு விதத்தில் அவருக்குப் பெரிய பிரச்சனையைத் தந்து விட்டது. ஒவ்வொரு முறையும், அவர் முழுப் படத்தையும் எடுத்து முடித்த பிறகு, அதற்குச் செலவான தொகையைத் தரமுடியாது என்று அவருடைய விநியோக நிறுவனம் ('ஃபர்ஸ்ட் நேஷனல்') அடாவடி செய்யத் தொடங்கியது. உதாரணமாக, இரண்டு ரீல் அளவுள்ள ஒரு படத்தை சாப்ளின் இயக்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் படத்தை எடுப்பதற்கு அவருக்கு ஆறு மாதங்கள் ஆகிறது. இதற்காக, மொத்தம் நூறு ரூபாய் செலவு செய்கிறார். படம் தயாரானதும், அந்த நூறு ரூபாயை 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனம் கொடுத்து, படத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும். இது தான் ஒப்பந்தம். ஆனால், அவர் படத்தை எடுத்தபிறகு, 'சாப்ளினுக்கு மட்டும் ஏன் நூறு ரூபாய் தரவேண்டும் ? மற்ற இயக்குநர்களெல்லாம் இரண்டு ரீல் படத்துக்கு அறுபது ரூபாய் தானே செலவழிக்கிறார்கள் ?', என்று வீண் சண்டையைத் தொடங்கியது ஃபர்ஸ்ட் நேஷனல். இது என்ன நியாயம் ? சாப்ளினும், மற்ற இயக்குனர்களும் ஒன்றா ? படத்தின் அளவு தான் கணக்கா ? தரம் முக்கியமில்லையா ? - இது தான் சார்லி சாப்ளினின் வாதம், 'மற்றவர்களைப் போல் அரை குறை தரத்திலான படங்களை என்னால் எடுக்க முடியாது. என்னுடைய படங்களை, மிகச் சிறப்பாகத் தயாரிப்பதற்காக நான் கடுமையாய் முயல்கிறேன். ஆகவே, அதிக செலவு ஆவது சகஜம் தான். உங்களுக்கு நல்ல படங்கள் வேண்டுமானால், இந்தத் தொகையை நீங்கள் தந்தாக வேண்டும்' சாப்ளினின் பேச்சில் நியாயம் இருந்தாலும், ஒவ்வொரு முறையும், கடும் போராட்டத்துக்குப் பிறகு தான் அவரால் தன்னுடைய படங்களை வெளியிட முடிந்தது. சிறிது காலத்துக்குள், இந்த விளையாட்டு அவருக்குச் சலித்து விட்டது. கஷ்டப் பட்டுப் படம் எடுக்கிறோம். மக்களும் அதை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நம் படங்களை ரசிகர்களிடம் கொண்டு செல்ல முடியாதபடி நடுவே இந்தப் படக் கம்பெனிகளின் தடை. அந்தக் காலத்திலிருந்தே, திரைப்பட உலகத்தில் இந்தப் பிரிவினை உண்டாகி விட்டது. கலைஞர்களும், பட அதிபர்களும் ஒருவரையொருவர் விரோதிகள் போல் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நடிகர்கள், இயக்குனர்கள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்காக மக்கள் படம் பார்க்க வருகிறார்களா ? அல்லது, அவர்கள் தங்கள் படங்களை எடுப்பதற்குப் பணம் செலவழிக்கும் நிறுவனங்கள் தான் முக்கியமா ? இந்தப் பிரச்சனை சாப்ளினுக்கு மட்டுமின்றி, அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலருக்கும் இருப்பது தெரிய வந்தது. இத்தனைக்கும், இவர்கள் எல்லோரும் மக்களிடையே பெரிய புகழ் பெற்றவர்கள். ஆனால், எந்தப் பட நிறுவனமும், அந்தக் கலைஞர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை. இதைப்பற்றி சாப்ளின் தனது நண்பர்களிடம் தீவீரமாய் விவாதித்துக் கொண்டிருந்த போது தான், அதிர்ச்சி தரும் இன்னொரு தகவல் தெரிய வந்தது. அப்போதைய சில பெரிய பட நிறுவனங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கொண்டு, நடிகர்கள், இயக்குனர்களைத் தங்களின் விருப்பம் போல் ஆட்டி வைக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதாக ஒரு காற்று வழிச் செய்தி. விசாரித்த போது, இது உண்மையான தகவல் தான் என்று தெரிய வந்தது. 'மெகா' சூப்பர் மார்க்கெட்டுகள், உள்ளூரின் எளிய மளிகைக் கடைகளை நசுக்கி அழித்து விடுவது போல், பெரிய சினிமா கம்பெனிகள் சேர்ந்து, ஒரு மிகப் பெரிய நிறுவனத்தை உருவாக்கி, ஊரில் இருக்கும் சிறிய பட அதிபர்கள், கலைஞர்கள் எல்லோரையும் மொத்தமாய் ஒடுக்கி விடுவதாய் கொடூரத் திட்டம். இதைக் கேள்விப் பட்டதும், சாப்ளினும், அவருடைய சிநேகிதர்களும் ரொம்பவே எரிச்சலாகி விட்டார்கள். 'நாம் மூளையைக் கசக்கி, புதுமையான படங்களை எடுத்துத் தருவதும், அதை வைத்துக் கொண்டு இவர்கள் டாலர் மழையில் நீந்திக் குளிப்பதும் என்ன நியாயம் ?', என்று அவர்களே தங்களைக் கேட்டுக் கொண்டார்கள். 'உடனடியாக, இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று உணர்ச்சிவசப்பட்டார்கள். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு அட்டகாசமான யோசனை தோன்றியது. எத்தனை பெரிய பட அதிபர்கள் ஒன்றாக இணைந்தாலும், அவர்களிடம் ஏகப்பட்ட பணம் தான் இருக்கும். அதை மட்டும் வைத்துக் கொண்டு படம் எடுத்து விடமுடியாது. ஆகவே, கலைஞர்கள் இல்லாவிட்டால், எத்தனை பெரிய கம்பெனியும், காலி பெருங்காய டப்பாதான் ! - இந்தத் துருப்புச் சீட்டை வைத்துக் கொண்டு, பெரிய பண முதலைகளை எதிர்த்துப் போராடுவதாக அவர்கள் தீர்மானித்தார்கள்.